திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணால் உயிரைத் துறப்பர் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நாண் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பர்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார். (உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.)
நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அது மட்டுமன்று) நாணுடைமை தவறாத சான்றோர்கள் நாணத்துக்காக உயிரை விடுவார்களே யல்லாமல் உயிரைப் பெரிதாக எண்ணி நாணத்தை விட்டுவிட மாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நாணத்தினது சிறப்பினை அறிந்து அதன்வழி நிற்பவர்கள் அந்த நாணமும் உயிரும் தம்முள் மாறுபட்ட போது நாணத்தினைக் காக்க உயிரை விடுவார்களே தவிர, உயிரைக் காப்பாற்ற நாணத்தினை விட்டுவிட மாட்டார்கள்.
Translation
The men of modest soul for shame would life an offering make,
But ne'er abandon virtuous shame for life's dear sake.
Explanation
The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.