LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டு.

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷுக்கு ஊக்கத்தொகை யாக ரூ.75 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கனடாவின் டொரன்டோவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் குகேஷ் 17 வயதில், ‘சேலஞ்சராக' வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றியை முதல் வீரராகச் சாதித்துள்ளார்.

 

அவர் தனது 12-ஆவது வயதிலேயே இளம் கிராண்ட்மாஸ்டராக தகுதி பெற்றவர். இளம் வீரராக வரலாறு படைத்த அவர் சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், உடனடியாக அவரை முகாம் அலுவலகத்துக்கு அழைத்து குகேஷை பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

 

ஏற்கெனவே இப்போட்டியில் பயிற்சி பெறுவதற்காக, தமிழக அரசின் சார்பில் குகேஷுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றி வாகை சூட முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். 

 

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ‘இளம் வயதில் ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்று அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகையை அளித்து வாழ்த்தினேன், கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழகத்திலிருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்துவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகளுக்கு பாராட்டுகள். 

 

இளைஞர்கள் படிப்புடன் ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள், உங்கள் உடலையும், மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள அது உதவும்’ என்று தெரிவித்துள்ளார். 

 

ஊக்கத்தொகை பெற்ற குகேஷ் கூறும்போது, ‘‘தமிழக அரசு விளையாட்டு வீரர்களைப் பல்வேறு வகையில் ஊக்குவித்து வருகிறது. பயிற்சி பெறும்போது ஊக்கத்தொகையையும், போட்டி முடிந்த பிறகு பரிசுத் தொகையையும் உடனடியாக வழங்கியது மகிழ்ச்சியும், ஊக்கமும் அளிக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்’’ என்றார். 

 

நிகழ்ச்சியில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோருடன் இருந்தனர்.

by Kumar   on 01 May 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக வீரர்கள் இடம்பெறாத டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு. தமிழக வீரர்கள் இடம்பெறாத டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு.
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.